பனியுருகி பாதை விரிந்து ஓடுகின்ற நதியே
வளைந்து நெளிந்து கரைபுரண்டு கடல் சேர்வதெப்போது
வருகின்ற வழிதோறும் என்னென்ன கண்டாய் சொல்வாயா
மலையரசி கண்டாளா கனியமுது காய்கறிகள் தந்தாளா
மண்ணோடு உறவாடி மதகுகடந்து ஏனிந்த வேகம்
கானகத்து மரவேரும் உனைத் தழுவக் கண்டேன்
கரையோரப் புல்லும் வளைந்து உறவாடக் கண்ணுற்றேன்
மீன்கள் துள்ளி விளையாடி நீந்தக் கண்டேன்
மீன்கொத்திப் பறவையதோ இறைதேடி பாய்ந்தது உன்னுள்ளே
சிறியோரும் பெரியோரும் பெண்டிரும் நீராடிக் களித்தாரே
சித்திரை கடந்து ஆடிப்பெருக்கில. அலங்கரித்து மகிழ்ந்தாரே
கடலோரம் நானோ உன்வரவு நோக்கிக் காத்திருப்பேன்
காலம் கடத்தாமல் வந்திங்கு சேர்வாயா விரைவில் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக