சனி, 25 ஜூலை, 2020

எல்லை காக்கும் வீரர்

எல்லைகள் காத்து நிற்கும் சகோதரரே
தொல்லைகள் பலவும் தினம் உமக்கு
சுற்றம் நட்பு துறந்து தூரத்தே
பெற்ற குழந்தை உற்ற மனைவி
யாவரும் இங்கிருக்க பனியிலும் வெயிலிலும்
காடு மலை கரடுமுரடான பாதை
கடந்து செல்லும் உம்மைப் போற்றிடுவோம்
நாட்டுப் பற்று மக்கள் நலன்
நாடி நரம்பினிலே நல்லோர் நீவிர்
பயமற்று நாட்டினர் தம்மூரில் இருக்க
பயமில்லா வீரம் உள்ளத்து உரமோடு
காவலரே கரம்கூப்பி் நன்றி சொல்வோம்
உம்மோடு எம்உணர்வு துணையாய் நிற்கும்
உளமார உமைப் போற்றி வணங்கிடுவோம் !

கருத்துகள் இல்லை: