சனி, 25 ஜூலை, 2020

நெடுங்கதை - 1

நெடுங்கதை ஒன்று மனதிலே தோன்றியது. உண்மையும் பொய்யும் கலந்த காதல் கதை. பல அத்தியாயங்கள் வரலாம்,அனைவருக்கும் பிடித்திருந்தால். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம்.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கதையின் ஆரம்பம். 2005ம் ஆண்டு.
கதையின் நாயகன் ஆதவன், வயது 28. நாயகி தாமரை, வயது 23.
ஆதவன் படித்தது பொறியியல் மற்றும் எம் பி ஏ, ஒரு மிகப் பெரும் கம்பெனியில் உகவி மேலாளர் தாமரை பி எஸ் சி ( சைக்காலஜி), நடுத்தர கம்பெனியில் எ
ச். ஆர். பிரிவில் எக்ஸிகியூடிவ் ட்ரெயினி.
ஆதவன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலே தாயைப் பறி கொடுத்தவன் தங்கைக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது. சென்னை வாசி.
தாமரையின் குடும்பமும் நடுத்தரம், ஆனால் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள். இரு அண்ணன்களுக்குத் திருமணமாகி இருந்தது. இவள் மும்பை வாசி். மாதுங்காவில் இவர்கள் குடும்பம். இப்போது வீட்டில் ஒரு அண்ணன்,அவன் மனைவி,ஒரு தங்கை. மற்ற அனைவரும் வெவ்வேறு ஊர்களில். தேவைப்பட்டால் கதையில் நுழைவர்.
வாழ்க்கையில் சாதிக்கத் துடித்த இவர்களோடு விதியும் பயணித்தது.
(வளருமா ?)

கருத்துகள் இல்லை: