செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அம்மாவுக்கு ஒரு பாட்டு

அம்மாவுக்கு ஒரு பாட்டு
அன்னை தாலாட்டுக்கு ஒன்று
ஆராரோ பாடி அமுதூட்டிய தாய்க்கு
உயிர் கொடுத்த உத்தமிக்கு
உதிரம் பாலாய் ஊட்டியவளுக்கு
எனக்காக கண்விழித்த கண்மணிக்கு
எண்ணற்ற தியாகம் செய்த அவளுக்கு
கடல் அளவு பாசம் வானளவு வாஞ்சை
கிடைக்குமா இன்றும் எப்போதும்
உன் பாசக் கரங்களுக்கு
உலகையே ஈடு கொடுக்கலாம்
மீண்டுமொருமுறை உன் வயிற்றில்
பிறந்து தாயே
உன்மடி சேர வேண்டும்
வரம் தருவாயா 
காத்திருக்கிறேன் !


கருத்துகள் இல்லை: