செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தாயாக நீ

எனக்காக நீ அழுத காலங்கள் போய்
உனைத் தேடி உருகவைத்தாய்
ஓர் அடி வைத்த பாதம் முத்தமிட்டாய்
ஓராயிரம் அடிவைத்தாலும் உனைச்சேர முடியாது
கவளச்சோறூட்ட நிலா அழைத்தாய்
காணாமல் இன்று நிலவுக்கும் அப்பாலே
கண்ணே கனியமுதே என்றவளே
கண்ணுக்கும் எட்டாத தொலைதூரத்தில்
கன்னத்தைக் கிள்ளி நகைத்த நீ
கண்மூடிப் பார்த்தாலும் காணவில்லை
கள்ளமற்ற உன் உள்ளம்
காணக் கிடைக் கவில்லை
காத்திருக்கேன் பலகாலம் உனக்காக
தாயாக நீயும் தவழும் குழவியாய ்நானும்
இன்னொரு முறை விளயாடுவோமா ?

கருத்துகள் இல்லை: