செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அவசர உலகம்

தென்றல் வந்து எனைத் தொட்டுப் போகும்
தேமதுரத் தமிழோசை கேட்கும்
காலையிளம் கதிரவன் கண்டு புள்ளினங்கள் கூடு துறக்கும்
காளை பூட்டிய வண்டியில் சலங்கை ஒளிக்கும்
சாணம் தெளித்த வீதிகளில் மாக்கோலம் விரியும்
சாத்திரங்கள் ஓதும் சான்றோர் குரல் கேட்கும்
ஏர்பூட்டி உழவுக்கு ஏற்றம் இறைக்கும்
எண்ணிப் பார்த்தேன் எத்தனை அழகு
அனைத்தும் மாறிய அவசர உலகம் என்செய்வேன் !

கருத்துகள் இல்லை: