செவ்வாய், 18 செப்டம்பர், 2018

மனக் கசடு

மீண்டும் மீண்டும் சொல்வேன்
மத மொழி சாதியற்ற
மக்களே என் உறவினர்
மண்ணில் மாச்சர்யம் எதற்கு
இன்றிருப்போர் நாளைஇல்லை
இங்கிருக்கும் எதுவும் உனதில்லை
இயன்றவரை இல்லார்க்கு உதவு
இழிவாக எவரையும் எண்ணாதே
இறை பெயரால் இழிசெயல்
வர்ணவேற்றுமை தீண்டாமை
அறவே அழித்து விடு
அறம் வளரப் பாடுபடு
நாட்டுக்கும் நகருக்கும் நன்மைசெய்
நல்லதோர் தலைவனை தேர்வுசெய்
மனக் கசடுகளை கழுவிடு
மக்கள் அனைவரும் உற்றோரே
மாயக் கண்ணாடியைக் கழட்டு
இனியேனும் இவ்வுலகம் அமைதியுறும்
மாறுமாறவிடு இல்லையேல் மரித்துப்போ !

கருத்துகள் இல்லை: