செவ்வாய், 18 செப்டம்பர், 2018

விடிவு இல்லை

ஊருக்கு ஒரு பாதை இல்லை 
ஓடுகிற ஆற்றின் குறுக் கே ஒரு பாலம் இல்லை
விவசாயி வாழ்க்கை உயரவில்லை
கழனியில் வேலை செய்ய ஆளே இல்லை
நெல் விளயும் பூமிக்கு நீருமில்லை
வெள்ளக்காடாய் ஒரு பக்கம்
வெடிக்கும் பாலையாய் மறுபக்கம்
ஊருக்காய் உழைத்த உத்தமர் மறைந்தார்
ஊரை ஏய்க்கும் எத்தர் எங்கும்
கேட்கவும் ஆளில்லை செய்யவும் ஆளில்லை
எனைப் போன்றோர் எழுதும் வரிகள்
பட்டாணிக் கடையில் பொட்டலமாய்
பஜ்ஜிக்கடையில் வடிகட்டியாய்
விடிவும் இல்லை விடையும் இல்லை

கருத்துகள் இல்லை: