செவ்வாய், 18 செப்டம்பர், 2018

விடியல் தேடு்!

காசுக்கு விலைபோன என் மக்களே !
காதையும் வாயையும் மூடியதேன் சொல்வீர் !
தூண்டில் புழுவுக்கு மீனாய் சந்தையிலே 
கால்காசு கொடுத்து கோடியிலே அவன் புரள
கால் வயிறு நிரம்பாமல் தெருக்கோடியில் நீ
காமராசல்ல இவர் கசடர் அறியவில்லை
கடமையே கண்ணென்பது அந்தக்காலம்
காசேதான் கடவுளடா இந்தக் காலம்.
இரண்டு நாள் இன்பத்திற்கு ஆண்டுகள் தொலைத்தாய்
நல்லவர் ஒருவரை ஊர்தோறும் தேடு
அரசுக்கட்டிலில் அமர வழிவகை செய்
ஆயிரம் காமராசர் அப்போது வ்ருவார்
கற்றுக்கொள் கசடு நீக்க காலம்கடக்குமுன்னே
விட்டில் பூச்சியாய் விளக்கில் மடியாதே்!
விழித்தெழு விரைந்திடு விடியல் தேடு்!

கருத்துகள் இல்லை: