ஆயிரம் கரத்தோனே ஆதவனே
ஆண்டுகள் பலவானாலும் ஆறாது உன் ஆற்றல்
ஆயுள் நீட்டிக்க நீ மருந்தே
காய்கனி காடு கழனி கார்மேகம்
நீயின்றி இவையில்லை
இருளுக்கு எதிரி குளிருக்குப்பகை
இவையாவும் மறுக்கவில்லை
ஆயின் சுட்டெரிக்கும் சுடராய்
சிலகாலம் நீ சீறுவது ஏன்
மறந்துவிடுவர் மக்கள் உமையென்றா ?
மழை கொண்டு வந்து
மனம் குளிரச் செய்வாயா ?
ஆண்டுகள் பலவானாலும் ஆறாது உன் ஆற்றல்
ஆயுள் நீட்டிக்க நீ மருந்தே
காய்கனி காடு கழனி கார்மேகம்
நீயின்றி இவையில்லை
இருளுக்கு எதிரி குளிருக்குப்பகை
இவையாவும் மறுக்கவில்லை
ஆயின் சுட்டெரிக்கும் சுடராய்
சிலகாலம் நீ சீறுவது ஏன்
மறந்துவிடுவர் மக்கள் உமையென்றா ?
மழை கொண்டு வந்து
மனம் குளிரச் செய்வாயா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக