செவ்வாய், 18 செப்டம்பர், 2018

ஆயிரம் கரத்தோனே ஆதவனே

ஆயிரம் கரத்தோனே ஆதவனே
ஆண்டுகள் பலவானாலும் ஆறாது உன் ஆற்றல்
ஆயுள் நீட்டிக்க நீ மருந்தே
காய்கனி காடு கழனி கார்மேகம்
நீயின்றி இவையில்லை 
இருளுக்கு எதிரி குளிருக்குப்பகை
இவையாவும் மறுக்கவில்லை
ஆயின் சுட்டெரிக்கும் சுடராய்
சிலகாலம் நீ சீறுவது ஏன்
மறந்துவிடுவர் மக்கள் உமையென்றா ?
மழை கொண்டு வந்து
மனம் குளிரச் செய்வாயா ?

கருத்துகள் இல்லை: