செவ்வாய், 18 செப்டம்பர், 2018

மனிதரே பகைவர்

வானத்தில் பறக்கும் வல்லூறு
பூமிமேல் காணும் கோழிக்குஞ்சு
வனத்தில் வலம்வரும் புலி
காற்றினும் விரைந்திடும் புள்ளிமான்
நீரினுள் உறையும் முதலை
நிலத்தின் வாழும் உயிரினம்
புற்றுக்குள் வாழும் பாம்பினம்
பதுங்கும் வாலினம் எலிகள்
பகையென்றும் பசியென்றும் வந்தால்
பாய்ந்தே தன்னுள் அடக்கிடும்
மனிதருக்கு மட்டுமே மனிதரே பகைவர்
மதமென்று மொழியென்று மண்ணென்று
நீருக்கு நீண்ட வான்வெளிக்கு
கடலுக்கு காற்றுக்கு கால்வாய்க்கு
கற்பனைக்கும் எட்டாத எல்லாவற்றுக்கும்
ஏனிந்த ஆட்டம் வாழ்வதோ சிலநாட்கள்
ஆறடி நிலமொன்றே சிலருக்கு
ஆற்றுநீரில் கரையும் சாம்பலாய்
அனைத்தும் அறிந்தும் அடங்கமாட்டாயா ?

கருத்துகள் இல்லை: