செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வேற்று வழி இல்லையினி


விலங்கோடு விலங்காக வேட்டையாடி
பகிர்ந்துண்டான் ஆதி மனிதன்
பசி மட்டுமே வயிற்றில் இருந்தபோது 
பாழும் சாதிபேதம் இல்லை மனதில்
பரந்த உலகமே தனதாக் கி
ஊர் விட்டு ஊர் சென்று
உணவைத் தேடினான்
உயிர் பிழைப்பது மட்டுமே மனதில்
நாடுகள் இல்லை நதிகள் பிரிவில்லை
வயிறு நிரம்பிய உள்ளம்
வாலிப முறுக்கில் சுகம்தேட
வந்தது முதல் பிளவு
தன் துணை தன் மக்கள்
தனக்கென ஓர் இடம்
வீடுகள் கிராமம் நகரம்
பெருகிய வட்டத்தில்
பொறாமை சுயநலம் பொல்லாங்கு பலவும்
அமைதிப் பூங்கா காடானது
மனிதனை மனிதனே கொல்லும்
விலங்குத் தன்மை வந்தது
வேற்றுமை பாராட்டி
வெட்டி மடிந்து மானிடன்
விலங்கினும் கீ்ழானான்
வேதனை தான் என்றானது
வே
ற்று வழி இல்லையினி
மானுடம் மெல்லச் சாகும் !

கருத்துகள் இல்லை: