செவ்வாய், 18 செப்டம்பர், 2018

மனிதர் மாறுவரா ?

சொல் வளம் பொருள் வளம்
நீர வளம் நில வளம்
பல் வளமும் பெருகி
பாரதம் சிறக்கப்  பாடிடுவோம் !
பசியில்லா மனிதர் 
பகையில்லா தேசம்
பண்புள்ள மனிதர்
பாட்டுக்கு மட்டுமா ?
மனிதர் மாறுவரா ?
மனமும் பண்படுமா ?
மாக்களும் உறவு தேடும்
மானிடம் பகையை விடுமா ?
மாசற்ற உள்ளம் உண்டா ?
மண்ணுக்கும் பணத்துக்கும்
ஆசை கொண்டே
மாபாதகம் செய்யுமிவரே
மாறிடும் நாள் உண்டோ ?
வேதனையே வாழ்க்கை என்றால்
வேற்றுலகம் செல்வேன் நானே !

கருத்துகள் இல்லை: