செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அமைதியுண்டு

காட்டு மலருக்கும் வாசமுண்டு
காக்கைக்கு கரைந்துண்ணும் குணமுண்டு
சேற்றிலே செந்தாமரை மலர்வதுண்டு
பாதைகள் கரடானாலும் பயணங்களுண்டு
படிக்காத மேதைகள் பாரினிலுண்டு
படித்தும் பண்பில்லா மாக்களுமுண்டு
வறண்ட பாலையில் சோலைகளுண்டு
வளமான நிலமும் வறண்ட பாலையாவதுண்டு
ஏற்றமும் இறக்கமும் எதிலுமுண்டு
ஏற்றிடும் மனதில் நிம்மதியுண்டு
போற்றலும் தூற்றலும் பாரினிலுண்டு
போகட்டும் விட்டுவிடு் அமைதியுண்டு

கருத்துகள் இல்லை: