செவ்வாய், 18 செப்டம்பர், 2018

காத்திருப்பேன் நானே !

உனக்கென நானும் எனக்கென நீயும்
உருகிக் காதலித்த நாட்கள் எங்கே
உறக்கம் தவிர்த்து உன் நினைவாக
உறைந்த இரவுகள் எங்கே
இமைமூடி இதமான உன்நினவை
இதயக் கூட்டில் சுமந்த நாட்கள் எங்கே
உன்உடல் சூட்டில் குளிர்காய்ந்து
உரசும் உன்தோளில் சாய்ந்து
கண்ணோடு கண்பேசி காதலுற்று
கையோடு கைகோர்த்த நாட்களெங்கே
ஆறுதல் வார்த்தை அணைப்பு
இணைந்த உதடுகள் எங்கே
இருக்கும் காலமெல்லாம் உன்காலடி
இதுதானே நீசொன்ன சொற்கள்
இரக்கமில்லாமல் இனியேனும் விலகிநில்லாமல்
விரைந்து வந்திடு காதலியே
வழிமீது விழிவைத்து காத்திருப்பேன் நானே !

கருத்துகள் இல்லை: