வள்ளுவனைத்தந்த தமிழினமே
வாழ்விலக்கணம் வகுத்தது நீயே
வரலாற்றில் வையகம் சேர்த்தாய்
வான சாத்திரத்தில் விற்பன்னரானாய்
வேதங்கள் படைத்து் வேள்விசெய்தாய்
பொற்றாமரைக்குளம் சங்கம் வளர்த்தாய்
புகழ்பாடும் புலவர்க்கு பொற்காசு ஈந்தாய்
பாண்டியன்சேரன் சோழன் பல்லவன்
பரங்கியரை பதறவைத்த மன்னர்கள்
வீரம் விளைந்த நாட்டிலின்று வீண்பேச்சு
விட்டில் பூச்சியாய் இலவசத்தில் அழியாதே
விழித்தெழு வீறுகொள் ஒளிர்விடு
விரைந்து செயல்படு உயரட்டும் உன்னதநாடு !
வாழ்விலக்கணம் வகுத்தது நீயே
வரலாற்றில் வையகம் சேர்த்தாய்
வான சாத்திரத்தில் விற்பன்னரானாய்
வேதங்கள் படைத்து் வேள்விசெய்தாய்
பொற்றாமரைக்குளம் சங்கம் வளர்த்தாய்
புகழ்பாடும் புலவர்க்கு பொற்காசு ஈந்தாய்
பாண்டியன்சேரன் சோழன் பல்லவன்
பரங்கியரை பதறவைத்த மன்னர்கள்
வீரம் விளைந்த நாட்டிலின்று வீண்பேச்சு
விட்டில் பூச்சியாய் இலவசத்தில் அழியாதே
விழித்தெழு வீறுகொள் ஒளிர்விடு
விரைந்து செயல்படு உயரட்டும் உன்னதநாடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக