செவ்வாய், 18 செப்டம்பர், 2018

இறைவா நன்றி உனக்கு !

இனிய காலை இரவின் மறைவு
கதிரவன் வரவு காரிருள் விலகல்
புள்ளினங்கள் கூடு துறந்து 
இரை தேடும் பயணம்
புத்தம் புதுக் காலை
பூபாளம் இசைக்கும் நேரம்
கூவும் குயிலின் கானம்
கூடவே கிளிகளின் கீதம்
இயற்கையின் இன்ப விளையாட்டு
சுட்டெரிக்கும் சுடராய்
சுகமான தென்றலாய்
தூரத்து இடிமுழக்கமாய்
தூறும் மழையாய்
மலையின் அருவியாய்
மான்களின் துள்ளலாய்
மயிலின் தோகையாய்
மந்தியின் சேட்டையாய்
கானகமாய் பசுஞ்சோலையாய்
எத்துணை கொடுத்தாய்
இறைவா நன்றி உனக்கு !

கருத்துகள் இல்லை: