வெள்ளி, 11 மே, 2018

கோடை வெயிலே கருணை காட்டுநீ

கோடை வெயிலே உன் கோரத்தாண்டவம் ஓய்வதெப்போது
கருணை காட்டுநீ காற்றும் சூடாச்சு
தொட்டவிடமெல்லாம் சுடுகிறது
தண்ணீரும் வெந்நீராய் 
தாகம் தணிக்க தண்ணீர் இங்கு காசுக்காய்
காற்றும் மணலோடு கலந்து
ஊழிக்காற்றாய் ஊர்தோறும்
புரிகிறது எனக்கு உன்கோபம்
தீயசெயல்கள் பெருகிடும் போதெல்லாம்
உணர்த்திடும் போக்கு இதுவன்றோ
சற்றே பொருத்தருள்வாய்
பிரளய மாற்றம் இப்போது வேண்டாம்
பிரிதொரு நாளில் திரும்ப வா !

கருத்துகள் இல்லை: