வெள்ளி, 11 மே, 2018

கவிஞன்

கவிஞன் என்றாலே கவலையின் உருவம்
கற்பனை உதிப்பதே அதனாலோ
உள்ளே எரிமலையாய் வெளியே குளிர்நீராய்
அந்நியன் அகமது புறமொன்று புதிராய்
அனைத்தும் அணையாத நெருப்பாய்
காதலால் கசிந்துருகி ஒரு கவிதை
காணும் காட்சியினால் கோபமாய் மற்றொன்று
வான்நிலை மாற்றம் நிகழும் நிதமும்
மழைமேகங்கள் மண்வாசம் சேர்க்கும்
மனக்குமுறல் நெருப்பாய் கொதிக்கும்
காலத்தை வென்று கவிதைகள் பேசும்
காதலும் காமமும் கலந்திருக்கும்
புரியாத புதிராய் சிலநேரம்
புதிய அறிஞராய் சிலநேரம்
இவனிலும் மாற்றமொன்றே நிரந்தரம் !

கருத்துகள் இல்லை: