வெள்ளி, 11 மே, 2018

சிந்தனைச் சிற்பிகள்

கனவிலே மிதக்கும் நாங்கள்
கற்பனை வான்வெளியில் தாரகைகள்
கணநேரத்தில் கண்டம்விட்டு கண்டம்பாய்வோம்
கண்முன்னே தோன்றும் காட்சிகள்
கவிதையாய் உருவெடுக்கும் உணர்வூட்டும்
சமுதாய நிகழ்வுகள் காதல் உணர்வுகள்
இயற்கை இனிய நினைவுகள்
கோபமாய் சில நேரம்
சாந்தமாய் சில நேரம்
பருவ மாற்றம் போல் மாறும்
பொய்யர்கள் அல்லர் கவிஞர்
பொறுப்பாய் பொருளுரைப்பர்
புரட்சிக்கும் வித்திடுவர்
புகழும் பாடுவர் புத்துணர்வூட்டுவர்
உள்ளக்குமுறல் வார்த்தையாய்
உலக நோக்கு வரிகளாய்
தினம் தினம் மாறிய சிந்தனை
சிறிய உளிகொண்ட சிற்பிகள் போல் !

கருத்துகள் இல்லை: