திங்கள், 15 ஏப்ரல், 2024

மனித மனம்

 கரை தொடும் கடல் அலை

நுரை தந்து போகுது பார்
கரை தொடும் நதி நீரும்
கறை கழுவி செல்வது பார்
மலை தழுவும் மேகக் கூட்டம்
மழை நீரைத் தருவது பார்
இலை தழுவும் இனிய காற்று
இடை நுழைந்து குளிருது பார்
இருள் போக்கும் கதிரோன் கிரண்
இலைப் பசுமை தருவது பார்
காசுக்கு செய்வது இல்லை காண்
கடமை எனக் கொள்வது பார்
மனித மனம் மட்டும் இங்கே
புனிதம் இழந்து போவது ஏன் ?

கருத்துகள் இல்லை: