கரை தொடும் கடல் அலை
நுரை தந்து போகுது பார்
கரை தொடும் நதி நீரும்
கறை கழுவி செல்வது பார்
மலை தழுவும் மேகக் கூட்டம்
இலை தழுவும் இனிய காற்று
இடை நுழைந்து குளிருது பார்
இருள் போக்கும் கதிரோன் கிரண்
இலைப் பசுமை தருவது பார்
காசுக்கு செய்வது இல்லை காண்
கடமை எனக் கொள்வது பார்
மனித மனம் மட்டும் இங்கே
புனிதம் இழந்து போவது ஏன் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக