திங்கள், 15 ஏப்ரல், 2024

கற்பனை கிராமம்

 அழகான வண்ண மலர்கள் சாலையோரங்களில்

பழகும் கிளிகள் கொஞ்சும் மரக்கிளைகள்
என்றோ காணாமல் போன குருவியின் கீச்சுக் குரல்
கன்றோடு பசுவும் கட்டு்ண்ட கொட்டகை நாற்றம்
கலப்பை சேற்றில் சிக்காமல் உழுகின்ற உழவன்
களத்து மேட்டிலே நெற்கதிர்கள் உலர்த்தும் மனையாள்
கிணற்றில் குதித்து கோட்டை கட்டும் சிறுவர்
சாணத்தை தெளித்து கோலத்தை வரையும. பெண்டிர்
ஆட்டு மந்தையுடன் காட்டுக்குச் செல்லும் சிறுமி
பாட்டுக் கேட்டு தேனீர் அருந்தும் பெரியவர்
சேட்டுப் பயல் பனங்காய் பறிக்க உயரே
வேட்டுச் சத்தம் தொலைதூரக் கிணறு ஒன்றில்
வேகவைத்த நெல்லின் வாசம் காற்றோடு கலந்து
கதிரவன் வரவுக்கு கட்டியம் கூறிய கிராமம்
கண்முன்னே நிழலாட கற்பனை விரிந்து மலர்ந்தது

கருத்துகள் இல்லை: