திங்கள், 15 ஏப்ரல், 2024

இறைவன்

 எல்லாருக்கும் பொதுவானவன்

அவனே
வறியோருக்கும் வளமானவர்க்கும் அவனே
பொய்யான சொல்லுக்குப் பகையானவன்
மெய்யானவன் நெறியானவன் அவனே
கல்லான வடிவானவன் கருணையானவன்
விண்ணோடும் மண்ணோடும் உறவானவன்
எங்கும் நிறைந்தவன் இறைவன்
ஒன்றானவன் ஓராயிரம் உருவானவன்
சொல்லாத சொல்லுக்குப் பொருளானவன்
பிரிவில்லை அவனுள்ளே என்றானவன்
வர்ணங்கள் ஒன்றான வடிவானவன்
மனிதர்குலம் என்றுமே காப்பானவன்
வேணாமிந்த பிரிவென்றே சொல்வானவன்
வேற்றுமை களைந்திடச் செய்வானவன்
நேர்மையை நேர்படச் செய்வானவன்

கருத்துகள் இல்லை: