எல்லாருக்கும் பொதுவானவன்
அவனே
வறியோருக்கும் வளமானவர்க்கும் அவனே
பொய்யான சொல்லுக்குப் பகையானவன்
மெய்யானவன் நெறியானவன் அவனே
விண்ணோடும் மண்ணோடும் உறவானவன்
எங்கும் நிறைந்தவன் இறைவன்
ஒன்றானவன் ஓராயிரம் உருவானவன்
சொல்லாத சொல்லுக்குப் பொருளானவன்
பிரிவில்லை அவனுள்ளே என்றானவன்
வர்ணங்கள் ஒன்றான வடிவானவன்
மனிதர்குலம் என்றுமே காப்பானவன்
வேணாமிந்த பிரிவென்றே சொல்வானவன்
வேற்றுமை களைந்திடச் செய்வானவன்
நேர்மையை நேர்படச் செய்வானவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக