திங்கள், 15 ஏப்ரல், 2024

நட்பு மறக்காத நண்பர்கள்

 வந்து நின்று சபைக்கு வந்தனம் சொன்னேனய்யா

அதாகப்பட்டது
தைப்பூசத் திருநாளில்
தெக்கு வடக்கு கிழக்கு மேற்கு
எல்லாத் திசைலிருந்தும்
வண்டியேறி வாராங்க
யாருன்னு கேக்கியளா
அதாங்க ஒண்ணாப் படிச்சவங்க
வருஷம் எத்தனை ஆனாலும்
நட்பு மறக்காத நண்பர்கள்
நாப்பத்தஞ்சு ஆச்சுதாமே
ஆத்தாடி
கூடி வந்து பேசித் தீக்க
நல்ல நாள் இதுதானாம்
என்னாத்த பேசுவாங்க
எங்கே நின்னு பேசுவாங்க
பல்லவ ராசா வாழ்ந்த
ஊராமில்ல
மாமல்லனாம் அவன் பேர தாங்கி
கடலும் கடல் சார்ந்த இடமும்
வண்ணக் கோலம்
வரவேற்க
கதிரவன் கட்டியம் கூற
நூறாகி வந்த சனங்க
பாட்டென்ன கூத்தென்ன
பலவும் உண்டாமில்ல
பசுமை நிறைஞ்ச நினைவுகளை
பகிர வாராங்களாம்
எம்மாடி ஆயிரமாயிரம் மைல்கள் தாண்டி
பறந்து வாராங்களாம்
இந்த நல்ல உள்ளங்க
சும்மா வரல
கோடி ரூவாய ஏழைப்
பசங்களுக்கு
படிக்க உதவியும் செய்யறாங்க
கடல் போலவே மனசும்
நல்லா வாழட்டும்
நோயில்லாம இன்னைக்கும்
என்னைக்கும்
எம்மக்காள் !
(45th year CEG79, Engineering Classmates meet at Mahabalipuram today )

25/01/2024

கருத்துகள் இல்லை: