திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் ஒன்பது, பத்து ( 19/3/24, 20/3/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஒன்பது, பத்து ( 19/3/24, 20/3/24)
காலை எட்டரை மணிக்குக் காலையுணவை முடித்து, இமாசலப் பிரதேசத்திற்கும், டல்ஹவுசிக்கும் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பி, 340 கிமீ பயணத்தைத் தொடங்கிய போது எட்டு , ஒன்பது மணி நேரத்தில் சண்டிகரை அடையலாம் என கூகுள் சொன்னது, மலைப்பாதையை விரைவில் கடந்து தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் தொடர்ந்தது. மதிய உணவுக்கு, வழக்கம் போல, சுமாரான ஓட்டல் ஒன்றில் நமது சாரதி நிறுத்த, வட இந்திய சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு, சண்டிகரை நோக்கி பயணம் மீண்டும். இதற்கிடையில், ஏற்கனவே புக் செய்த ஓட்டல் booking.com கன்ஃபர்ம் பண்ணிய ரேட் தவறானது என்றும், மேலும் ஆயிரம் ரூபாய் வரை ஆகும், ஃபைவ் ஸ்டார் போன்ற ரெசார்ட் என ஏதோ கதைகள் சொன்னார். அதைக் கேன்சல் செய்து வேறொரு ஓட்டல் புக் செய்து, சண்டிகரை அடைந்த போது மணி் ஐந்தை நெருங்கி இருந்தது.
ஓட்டல் அறை பழையதாய், சுமார் மூஞ்சி குமார் போல இருந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பின், சுற்றிப் பார்க்க நடக்க ஆரம்பித்த போது Sector 17B என்பது பேங்க்ஸ் மட்டுமே உள்ள பகுதி என அறிந்தேன். மற்றொரு பகுதிக்குச் சென்ற போது வெறும் அழகு நிலையங்கள் மட்டுமே. நகரம் நன்று திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப் பட்டுள்ளது. மிக அகலமான சாலைகள், நடை பாதைகள், பார்க்கிங் இடங்கள், சாலையோர மரங்கள் என மற்ற இந்திய நகரங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. ஓட்டல் எதுவும் கண்ணில் படாததால் அறைக்கே திரும்பி, இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு, உறங்கிய போது, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அறையைக் காலி செய்து, லோகல் சைட் சீயிங் முடித்து நேராக ஏர்போர்ட் செல்ல முடிவானது. இந்த ஒரு நாளுக்கு தனியான கட்டணம் நமது சாரதிக்குக் கொடுக்க ஏற்கனவே பேசி முடிவெடுக்கப் பட்டிருந்தது.
முதலில் சென்ற இடம் சுக்னா ஏரி, மிகப் பெரியதாய் அழகாய் இருந்தது. காலையுணவு அங்கே முடித்து, Luxury boat rideku டிக்கெட் வாங்கி, அரை மணி நேரப் பயணம் ஏரியில். ஏரிப்பாதையில் சிறிது நடை, ஓய்வுக்குப் பிறகு அருகில் இருந்த Rock Gardenkuப் பயணம். அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்த போது 1978 ல் கல்லூரிச் சுற்றுலா வந்த போது இங்கே வந்திருந்த பழைய நினைவு வந்தது. இதன் சிறப்பே பல இடங்களில் இருந்து உடைந்த பொருட்களை வைத்து, பல உருவங் களாகவும், கட்டிடங்களாகவும் ( வளையல்கள், எலெக்டிரிகள் பீங்கான் பொருட்கள், டைல்ஸ், பழந்துணிகள் எள பலவும்) மாற்றி இருந்தார் தனி ஆர்வலர் ஒருவர். மிகப் பெரியதான வளைந்து, நெளிந்து, படிகளில் ஏறி, செயற்கை அருவிகளைப் பார்த்து முடிக்க, கால்கள் வலியெடுத்து, வெயிலின் தாக்கத்தில், வியர்த்து, வெளியே வந்து, புறப்பட்டு ஏர்போர்ட் ஒன்றரை மணிக்கே அடைந்தாயிற்று. சாரதிக்கு விடை கொடுத்து,செக் இன் செய்து, பாதுகாப்புச் சோதனை முடித்து, மதிய உணவும் சாப்பிட்டு, மொபைல் சார்ஜ் போட்டு உட்கார்ந்த போது நடந்த நிகழ்வை தனியாக, பதிவிட்டுள்ளேன். பத்து நாள் பயணம் முடிந்து, பெங்களூருவை அடைந்து, வீடு சேர்ந்த போது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது.
வெகு நாட்கள் கனவாய் இருந்த பயணம் இனிதே நிறைவேறிய மகிழ்ச்சி், வெவ்வேறு அனுபவங்கள் இவற்றை மனதில் இருத்தி அசதியில் உறக்கம் ஆட் கொண்டது. இயற்கையோடு ஒன்றிய பயணங்கள் மனதில் ஓர் அமைதியை நிலை நாட்டுகிறது
(முற்றும் )

கருத்துகள் இல்லை: