வெள்ளி, 7 டிசம்பர், 2018

நரகாசுரர்

எல்லாமே மாறிப் போனது
அசை போட பழங்கதை மட்டுமே
பாட்டிக் கதை சொல்லும்
பாட்டனாய் நீயும் நானும்
பேசுவதும் எழுதுவதும் தவிர
பாமரனாய் ஒன்றும் செய்ய
இயலாதவனாய் நண்பா நீயும்தானே
தீயவை களையவே தீபாவளி
தீயிட்டுக் கொளுத்த பட்டாசு
அன்று மட்டுமே அழித்த இறைவன்
எங்கே போனான் தேடுகிறேன்
நரகாசுரர் ஆயிரமாயிரம் நாடெங்கும்
இன்னொரு தீபாவளி நாள்குறித்து
இவரெல்லாம் அழிக்க நீ வருவாயா ?

கருத்துகள் இல்லை: