வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஒற்றுமை வழிதேடு

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
பிரிவினை கண்டவர் யாரோ ?
மதமென்ற மாயை எதற்கு
தோலின் நிறம் கருப்போ வெள்ளையோ
உதிரம் மட்டும் சிவப்புதானே
கடவுளர் பலரும் கண்டவர் எவரோ ?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
தெரிந்தும் தெரியாத நிலை ஏனோ ?
கொண்டுவருவதும் எடுத்துச் செல்வதும்
மானிட உடல்மட்டும் தானே
மயக்க நிலை விட்டு வெளியேறு
மக்கள் நாமென்று கொள்
மாக்களும் பசித்தபோதே உண்ணும்
வேற்றுமை பாராட்டல் ஒழித்து
வேதங்கள் சொல்லும் உண்மையுணர்ந்து
ஒற்றுமை வழிதேடு உயர்வாய் !

கருத்துகள் இல்லை: