வெள்ளி, 7 டிசம்பர், 2018

கேள்விக்குறியாய் எதிர்காலம்

மாயவலைகள் பின்னப்பட்டன
மயக்க உணர்வில் வைக்கப்பட்டனர்
நன்மைதீமை உணராத நிலை
பொய் வாக்குறுதிகள் நாடகங்கள்
ஊழல் பெருச்சாளிகள் தலைமையில்
செய்வதறியாத மக்கள் செயலற்று
ஊடகங்கள் விபச்சார நோக்கில்
மூளைச் சலவை வேகமாய் எங்கும்
முடங்கியது ஆராயும் தன்மை
அரக்க குணமே அதிகவளர்ச்சி
சிக்கலில் சமுதாயம் சிக்குண்டு
விடைதான் இல்லை வினாக்கள் பல
விடிந்தது இன்னொரு நாளும்
கேள்விக்குறியாய் எதிர்காலம் நோக்கி ?

கருத்துகள் இல்லை: