வெள்ளி, 7 டிசம்பர், 2018

எம்மினம்..

என் இனத்திற்கு எப்போதும் வேதனை
கண்டமொன்றே கடலுக்கடியில் உறங்குகிறது
மாற்றான் மண்ணில் அடிமையாய் அல்லல்
ஊருக்கு இளைத்தவர் எம்மினம் என்றாயிற்று
நெல் வயல்கள் நீருக்காய் ஏங்கி கருகிற்று 
நெடும்புயலால் வேரோடு சாய்ந்தன மரங்கள்
மழை வெள்ளம் மண்குடிசை புகுந்தது
தீக்கனல் காட்டை கருகச் செய்தது
வானம் பொய்த்தது வயல்கள் வறண்டன
புயல் காற்று இல்லையேல் பெரும் வெள்ளம்
ஏனிந்த தண்டனை எம்மின மக்களுக்கு
ஏதேனும் பரிகாரமுண்டா செய்திட
நிம்மதியாய் வாழவிடு நிர்க்கதியாய் ஆக்காதே
இயற்கையோ இறைவனோ இனியேனும் வேண்டாமிது !

கருத்துகள் இல்லை: