வெள்ளி, 7 டிசம்பர், 2018

நண்பர்களே

தோண்டக்குறையாது அன்பும் அறிவும்
பண்பாளருக்கு உள்ளது பரிவும் பாசமும்
என்றும் அழியாதது காதலும் நட்பும்
வாழ்வில் உயரத்தேவை
விடாமுயற்சி திறமை
வணக்கத்திற் குரியோர்
மூதறிஞர் முன்னோர்
இறப்பின் பின்னும் தொடரும்
புகழும் செய்த தர்மப்பலனும்
சொல்லும் சொல்லின் சிறப்பும்
இறைவன் கொடுத்த வரம்
வாழும் நாளெல்லாம் நண்பர்களே
வசந்தம் வளம் செழிக் கட்டும் !

கருத்துகள் இல்லை: