வெள்ளி, 7 டிசம்பர், 2018

காதல் தேவைதானோ?

விழியிலே உதித்து இதயம் நுழைந்து
விடைகள் காணா உணர்வுகள் கலந்து
உறக்கம் தொலைத்து
கண்கள் பனித்து
உயிரின் ஆழம் கண்டு மீண்டுவந்து
பெரும் போராட்டம் என்றாலும்

விடாது தொடர்ந்து
சுட்டுவிடும் நெருப்பென்று தெரிந்தாலும்
சோகத்திலும் சுகம் கண்டு
உய்த்தவர்க்கே புரியும் இதன் வலிமை
காலமெல்லாம் நினைத்திருக்க

காதல் தேவைதானோ !

கருத்துகள் இல்லை: