வெள்ளி, 7 டிசம்பர், 2018

பொய்வாக்கு

ஏரு பூட்டி சோறு போடும் நண்பா 
ஏழையானாலும் உன்மனசு தங்கமே இங்கு
ஆனை கட்டி போரடிச்ச காலம்போச்சு
ஆர்கண் பட்டு ஆத்து நீர் வறண்டுபோச்சோ 
பாருக்கே பாரதம் முன்னோடி பாடிவச்சான்
பாட்டாளி உழைப்பாளி பரிதவிப்பது ஏனோ
காசுக்கு விலைபோகும் கயவர் கூட்டம்
காடாக நாட்டையே மாத்திப் புட்டாக
வீண்பேச்சு பொய்வாக்கு அரசே ஆச்சு
வாக்கு சுத்தம் இல்லாத நாடாபோச்சு
வாய்கிழிய கதறினாலும் செவிசாய்க்க ஆளில்லை
மாறுமோ இந்தநிலை மனசெல்லாம் குழப்பமே
மக்கள் துயர் தீக்க மன்னவன் வருவானோ!

கருத்துகள் இல்லை: