வெள்ளி, 7 டிசம்பர், 2018

விரைந்தோடி வா

என் காதுகளுக்குள் நீ இரகசியம் பேசி 
எத்தனை நாட்களாயிற்று
நதிநீரின் குளிர்ச்சியில் உன் கால்களை நனைக்க 
அதை என் கைபேசியில் புதைத்து வைத்தேன்
அடிக்கடி பார்த்து மகிழ
தூரமாய் நீ ஏங்கும் மனதோடு நான்
எத்தனை இரவுகள் இன்னும் இந்த இன்னல்
நாளொன்று போனால் வயதொன்று வளரும்
நரைத்த முடியை சாயமிட்டு மறைத்தே
இளமையை இருத்தி வைத்துள்ளேன்
முதுமை கொடியது கண்ணிமைக்கும் நேரத்தில்

காலனை அழைத்து விடும்
இனியேனும் தாமதம் செய்யாதே
இயற்கைக் காற்றில் இதயங்கள் சுமக்க

இமயம் போவதாய் சொன்ன வார்த்தைகள்
நீ உள்ளத்தின் ஆழத்தில் இருத்தி வைத்தாய் தானே
பனிபடர்ந்த சிகரங்கள் நமக்காய் 

கண் விழித்துக் காத்திருக்கின்றன
உன் கரம் பிடித்து தத்தி நடை போட்டு

மீண்டும் குழந்தையாய் நான் தவழ்ந்திருக்கிறேன்
விரைவில் வா! மேக ஊர்தியேறி விரைந்தோடி வா !

கருத்துகள் இல்லை: