வியாழன், 22 மார்ச், 2018

முதல் காதல்

முதல் காதல் முடியாக் காதல்
நிலவே நீ இல்லாது போனதனால்
விண்ணில் உலவுமந்தத் தாரகையும்
ஒளியிழந்து போனதடி
காதலின் வலியில் கருத்தரித்த கவிதை
ஆண்டுகள் பலவாயினும்
வாழ்க்கை வட்டத்தில்
வாலிபக்காதல் மனதில்
வந்துவந்து போகும்
வாசலில் கோலமிட்டு என்
வாழ்க்கையில் வண்ணமிட நினைத்தவளே
கோல
ம் கலைந்து கேரளம் சென்றாய்
உன் நினைவுகள் சுமந்தேன்
காலச்சக்கரம் உருண்டோடும் நேரம்
உன் நினைவுகள் மெல்ல மெல்ல மறைந்து
உலகவெளியில் உறைந்து போனது
எனக்காக நீ வடித்த கண்ணீரும்
காற்றில் கரைந்து
கால ஓட்டத்தில் கலந்தது
சிட்டுக்குருவியாய் சிறகடித்து வந்து
சிறிதேனும் உனைக்கண்டு வரவா ?

கருத்துகள் இல்லை: