வியாழன், 22 மார்ச், 2018

கவிஞன் காதல்

கவிஞன் காதல் மறக்கலாகாது
கற்பனை ஊற்றே அதுதானே
தேன்வந்து பாயும் காதில்
தேவதை உன் சொல்லின் மகிமை
வார்த்தைகள் வர்ணங்களாகும்
வரவே தென்றலாகும்
கூடுவிட்டு கூடுபாயும்
இதயக்கூடுகள் இடம் பெய
ரும்
இன்பம் இயற்கையாகும்
இரவும் பகலும் ஒன்றாகும்
காதில் விழும் உன் சொற்கள்
கன்னலாய் இனிக்கும்
கனவு நனவு சேர்ந்திருக்கும்
காதலின் வலிமை சொல்ல
காலமெல்லாம் போதாது
வாலிபம் வயோதிகம்
வேற்றுமையில்லை
வாழும் நாட்கள் முழுதும்
வந்து வந்து போகும் !

கருத்துகள் இல்லை: