வியாழன், 22 மார்ச், 2018

மனிதம்

 மனிதம் மரித்துவிட்டதோ
ஐயுறும் அவலம் அவ்வப்போது
கூட்டுக்குடும்பம் பிரிந்தது
கூடி வாழ்தல் அரிதானது
காதல் குறுகி காமம் மிகுந்தது
கருணையில்லா இதயங்கள்
காசுக்காகவே வாழும் உன்மத்தர்கள்
எதற்கும் துணிந்த எத்தர்கள்
எரியும் உள்ளத்து நெருப்பில்
எண்ணெய் ஊற்றும் ஈனர்கள்
அமைதி அன்பு அடுத்தோர் துயர்நீக்கல்
அரிதாய்ப் போனது அய்யகோ
எங்கே போகிறோம் மனிதா ?
எரிதழல் எரியூட்டும் உடலை !

கருத்துகள் இல்லை: