வியாழன், 22 மார்ச், 2018

கலங்காதிரு மனமே

இடிப்பாரை இல்லா எவனும்
துடிப்பாய் செயல்பட இயலாது
இருப்பினும் இடம் பொருள் பார்ப்பதுண்டு
விழலுக்கிறைத்த நீர் புல்லுக்கு மட்டுமே புசிதல் உசிதமல்ல
வானத்து நீர் போன்ற உம்கருத்து
வயலுக்கும் பாயும்
இரவென்று ஒன்றுண்டேல்
பகலென்றும் உண்டு
பருவங்கள் மாற்றம்போல்
நன்மை தீமைகள் மாறும்
மாயவன் விளையாட்டு
தேடி நிதம் நீர் சொல்லும் வார்த்தை
தேடிப்போய் சேரும் உரியவர்க்கு
கலங்காதிரு மனமே
காற்று இத்திசையிலும் வரும்

கருத்துகள் இல்லை: