வியாழன், 22 மார்ச், 2018

ஏக்கமும் தூக்கமும்

ஏக்கமும் தூக்கமும்
ஏன் படைத்தாய் இறைவா ?
ஏக்கம் தாக்கம் தாபம்
கோபம் கொடியது அன்றோ !
சிறுபொழுதேனும் தூக்கம் வேண்டும் 
சீரிய சிந்தனை இல்லாத்தூக்கம்
சிறிய வயதில் சில காலம்மட்டும்
கால மாற்றத்தில் கற்பனை பலப்பல
காட்சிகள் கண்முன்னே
கண்கள் மட்டும் உறங்க மறுத்தன
காதல் காமம் கவலை எல்லாம் சேர்ந்த எண்ணக்கீற்று
எனது உறக்கம் மறுத்தது
அமைதிப் பூங்காவாய் மாற்று
அப்போதாவது தூக்கம் என்
கண்களைத் தழுவும் !

கருத்துகள் இல்லை: