வியாழன், 22 மார்ச், 2018

விடியட்டும்

விடியட்டும் காத்திருந்தேன்
விடிவெள்ளி முளைத்தநேரம்
என்னுள்ளே தோன்றும்
எண்ணங்கள் உருப்பெறுமோ ?
பேதங்கள் அற்ற மானிடம்
பேதமை இல்லா பெரியோர்
சாதிகள் இல்லா சமுதாயம்
சாத்திரம் அறிந்த சான் றோர்
அன்னசத்திரம் ஆயிரம்
அனைவர்க்கும் கல்வி
அணைகள் ஆங்காங்கே
அள்ளக்குறையா நீரோட்டம்
இவையனைத்தும் இணைந்த
இயற்கை வளமும்கூட
நினைக்கவே ஆனந்தம்
நித்திரை கலைந்ததுவே !

கருத்துகள் இல்லை: