வியாழன், 22 மார்ச், 2018

தமிழ்மண்

கவிஞர் கணல் போன்றவர்
காணும் காட்சியின் கொடுமை
மனதினுள்ளே கசப்பு
காலம் காலமாய் ஒற்றுமை
கருத்தினில் இருத்திய தமிழ்மண்
கண்டவர் அழித்திட
கண்ணுற்று இருப்போமா ?
நல்லவை மட்டுமே நாடும்
நன்மக்கள் வாரீர் !
நல் பயிர் நடுவே
களையெடுத்தல் வேண்டும்
தலையில்லாத தனிமை
தவறேதும் சகியோம்
கொள்வது எல்லாம்
குணமதின் உயர்வே !
மாற்றாரை மதித்து
மனம் ஏற்பது நாமே !
அரவணைப்பின் அன்பை
அழிக்கப் பார்க்காதீர் !
சாம்பல் என்றெண்ணி
சாக்கடையில் தள்ளாதீர்!
கணல் சுடர்விட்டெறிந்து
சுட்டுவிடும் உம்மை!

கருத்துகள் இல்லை: