ஞாயிறு, 23 மார்ச், 2008

நலம் வாழ யார் பாடுவார்

நான் தேடியது கிடைத்தது என்று உவகை கொள்வாய்
நல்ல காலம் இதுவென்று மகிழ்ந்திருப்பாய் ஆனால்
நாட்கள் கடந்த பின்னே நட்பும் காதலாகும்
நன்று இதுவே பிறவி பயன் என்பாய்

நகைத்த நகையிங்கே மறையுமுன்னே ஊழ் வந்துசேர்ந்துவிடும்
நாடாறு மாதம் என்றால் காடாறு மாதம் உனக்கு
நல்ல அன்பும் நறுமண காதலும் தொலைந்து போகும்
நட்பு காதலாகி இப்போது கடமை மேலோங்கும்

உனக்கு மட்டும் உள்ளம் உருக்கால் செய்திருக்க வேண்டும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் உனக்கு
எப்போது வேண்டுமானாலும் எதுவும் மாறும் அதனால்
எதுவுமே நிரந்தரம் இல்லை வாழ்க்கை போல

இன்று இருப்போர் நாளை இல்லை இதய வார்த்தையும் மாறிப்போகும்
இயற்கை இதுதானோ இயல்பாய் கொள்வாயோ இரும்பாய் இருப்பாயோ
இருக்கும் காலம் எல்லாம் இதுவே விதித்திருக்கும் ஏற்றுக்கொள்
இதுவே இறைவன் சித்தமானால் இனிஎன்ன செய்வாய் நீயே

அன்பும் காதலும் அற்புத உணர்வுகள் ஆனால்
அடைவது அவைதனை ஆண்டவன் அருளால் அதிலும்
அரிது இரண்டும் அத்தனை எளியாதாய் எவருக்கும்
அமைவது இல்லை காணற்கரிய கணிபோருள்போல்


அலைந்து திரிந்து அடைந்த போதில் ஆறுதல் பெற்றாய்

அந்தோ! அடிக்கடி நேரும் சுழல் காற்றில் அலைக்கழிந்தாய்
அனைத்துக்கும் காரணம் நீயோ அன்றி ஆண்டவன் விளையாட்டோ
ஆறுதல் தேடி ஓடினாய் ஆனால் விடியல் வெகுதூரத்தில்

தேடும் பொருள் யாவும் தொலைந்து போகும் தெரிந்தும்
தெளிவில்லை நம் மனதில் தொடர்ந்து போவோம்
பசும் சோலை என்பது பாலைவன கானல் நீராகும்
பாலும் பழம் இருந்தும் புசிக்க இயலாது


அருகினிலே இருப்பது போலேன்றாலும் நெருங்க முடியாது
ஆசைபடு அறிந்து கொள் அடைதல் எளிதல்ல தெரிந்துகொள்
ஆதலால் சொல்வேன் தேடு தெளிவடை தேர்வு செய்
அடைவது மட்டும் ஆண்டவன் செயல் அதுவரை காத்திரு

கருத்துகள் இல்லை: