வியாழன், 29 மார்ச், 2007

திரும்பி பார்க்கிறேன் ..

முதல் பார்வை முதல் காதல்
என்றும் மறப்பதில்லை
சேர்ந்து வாழ்ந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்
ஓடி ஒளிந்த கதை எனக்கு மட்டும் தெரியும்

பூவாய் இருந்த நீ சருகாய் ஆனாயோ
நான் சூட நினைத்த மாலை யார் சூடிப் போனாரோ
எங்கோ தொலை தூரம் மேற்கு கரையோரம்
நீ தொலைந்த நாள் முதலாய் சோர்வுற்றேன்
மனச் சோர்வுற்றேன்

வாழ்க்கைப் பாதையில் தான் எத்தனை மாற்றங்கள்
வில்லும் அம்பும் தான் வெவ்வேறு இடமதிலே
எய்தவள் நீ அழுதபோது சோகம் பாராமல்
அம்பாய் உன்னை அனுப்பி வைத்தாரே ..

இப்போதெல்லாம் கனவுத்தேர் ஏறி ஊர்வலம்
வரும் போதில் அரபிக் கடலோரம்
உன்னை அடிகடி பார்க்கிறேன் ..
உன் விழிகளின் ஓரத்தில் சொல்லவொன்னா சோகமுடன்..

கருத்துகள் இல்லை: