திங்கள், 30 ஜூலை, 2007

என் நினைவே நீ தான்...

முதன் முதலாய் நாம் பார்த்த போது
முழுதாய் நாம் உள்ளங்களில் ஒன்றுமில்லை ..
களங்கமற்ற உன் முகமே என் கண் முன்னே நின்றது ..
குழந்தையாய் நீ எனக்கு தோன்றினாய் ..
மெல்லிய உடலால் மென்மையான பெண்ணானாய்..
வார்த்தைகள் முத்துக்களை உன் கொவ்வை வாய் திறந்து ..
உதிர்ந்தன ..உன்னத தோழி என்றே உன்னை
நான் நினைத்தேன் ..

மாதங்கள் பல உருண்டோடின ..மங்கை நீயோ அக்கரையில் ..
மற்றொரு முறை நான் உன்னை பார்க்காத போதும்
பாடல்கள் என்றும் படித்தவை என்றும்
பலவற்றை நாம் பரிமாறிகொண்டோம் - உள்ளத்தினுள்ளே
நீறு பூத்த நெருப்பாய் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும்
உறைந்திருந்ததை நாம் அறிந்திலோம் ..
ஊழிக்காற்று போல் வந்தது ஒரு நாள் ..உன் நினைவுகள் தாங்கி
உயிரோடு கலக்கவே காத்திருந்த ..உன் எண்ணங்கள் ..

ஆடிக்காற்றிலே எனது உனது ஆத்மாக்கள் அலைகழிக்கப்பட்ட பின்னே
அறிந்தோம் நாம் எனக்காக நீயும் உனக்காக நானும் உலகிலே பிறந்தோம் என்று .
உணர்ந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் நமக்கு
நான் பார்த்த பெண்களும் நீ பார்த்த ஆண்களும் நினைவில் நிற்காமல்
நிரந்தரமாய் ஒரு உறவை தேடி ஆவி போல் அலைந்தோமா ?
உருகும் மனதிற்குள் உயிர்கள் இணைந்ததுவோ ?
ஊண் உறக்கமில்லாத தினங்கள் பெருகிட ..
என் நினைவிலே நீ நிலைத்து விட்டாய் ..

கருத்துகள் இல்லை: