வெள்ளி, 17 நவம்பர், 2017

வாழ்ந்த நாட்களும் வரும் நாட்களும்

நட்பென்ற இலக்கணமே நாமென்றானோம்
பறந்து திரிந்த பறவைகள் கூடுகள் அடைதல்போல கூடினோம்
வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டோம்
கருத்தில் முரணென்றாலும் கண்ட நட்பு கரும்பினும் இனியது
வாலிபர் என்றும் நாங்கள் வயதொரு எண்ணே
வலிகள் உள்ளத்தின் ஆழத்தில் இருத்தி இறுக்கப் பூட்டி வைப்போம்
வாழ்ந்த நாட்களும் வரும் நாட்களும்
இனிய வரிகளே எங்கள் புதினமதில்
இனி வரும் காலங்களும் எங்களின் இளமைக் காலங்களே
மார்க்கண்டேயர்கள் நாங்கள் வரம்பெற்று வந்தோம் !

கருத்துகள் இல்லை: