வெள்ளி, 13 ஜனவரி, 2017

தேசியம்

 எனக்காகவும் உனக்காகவும்
தமிழுக்காகவும்
தலை வணங்குகிறேன்
தொன்மை மொழியென்றாலும் ஆதிக்கம் செலுத்துவோர்பலர்
வீரமரபில் பிறந்தும்நாம்
தன்னடக்கம் மிகுந்த இனம்
வீர விளையாட்டு உலகில் பலவுண்டு
தினவெடுத்த எம் தோள்கள் சிலம்பம் சுற்றக் கண்டீரா ?

வெட்டுதல் குற்றமில்லை உண்ணுதல் குற்றமில்லை
உலக மக்களுக்கு உணவாய் ஆக்குதல் குற்றமில்லை
ஆயின் என் இனத்து வீர மறவர் ஏறுதழுவுதல் குற்றமென்றீர்
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இதுதானோ

மனிதனை மனிதனே மாய்ப்பதெல்லாம் போர்முனையில்
நாட்டைக் காக்க தவறில்லை அது
விலங்கினும் கேவலமாய் வீரர்கள் எல்லையில் தவறில்லை அது
தண்ணீர் தரமறுக்கும் அண்டை மாநிலம் சட்டம்மீறினால் தவறில்லை

அண்டைநாட்டினில் எம் இனத்தோர் நாயைப்போல் சுட்டுக்கொன்றாலும் குருடனாய் இருப்போம்
ஆனாலும் வீரவிளையாட்டு நடந்தேற விடவேமாட்டோம்
அந்நிய நாட்டு அடிமைகள்இன்னும்நாம்
சுதந்திரம் என்பதும் தேசியம் என்பதும் வெறும் பேச்சே


கருத்துகள் இல்லை: