உன் தோள்களிலே என் தலை சாய்த்து
உறங்கும் கண்கள் இமை மூட
உன்னிலே நான் மட்டுமே என்றெண்ணி
உன்னில் நான் அடங்கி எனக்குள் மூழ்கி போகிறேன்
எனக்கு உன் மூச்சு காற்றின் சூடான ஒத்தடம்
என் மூச்சே நீ தான் என சுட்டி காட்டியது
எங்கே இருந்து வந்தாய் எத்திசை நோக்கி போவாய்
எனக்குள்ளே ஆயிரமாயிரம் கேள்விகள் விடைகள் நீதானே
உனது விரல்களின் நடனம் எனது முடி திரள் மேடையில்
உன் ஒவ்வொரு தடவலும் உயிர் அணுக்களில் உருண்டு விளையாடும்
நான் போவது எங்கே கேள்விக்கு பதில் சொல்லாதே
நான் நீயாக நீ நானாக மயக்க உலகில் நாம் இப்போது
நல்ல உறக்கம் இது நமது உலகம் வேறு
நான் உன் தோள்களில் உறங்கி போகிறேன் நீ எனை தாலாட்டு
புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)