திங்கள், 30 ஜூலை, 2007

வந்து விடு ..வந்து விடு

நீ இல்லாத உலகில் எனக்கு உறக்கம் மட்டுமல்ல
நீரும் உணவும் இன்ன பிறவும் பிடிக்கவில்லை
உன் நினைவில் நான் உள்ளம் உருகி தினம் தினம்
உயிர் குறைந்து போகிறேன் ..வா வந்து விடு

புத்தி மட்டுமல்ல மனமும் பேதலித்து விட்டதால்
நான் நானாக இல்லை நீ நீயாக இருக்கிறாயா
சோகம் நிறைந்த உணர்வுகள் அவ்வப்போது
கண்ணீர் துளிகளாய் மாறுகின்றன ..வா வந்து விடு

வெறும் வார்த்தைகள் எனக்கு போதவில்லை
உணர்ச்சிகளை உருவப்படுத்தி உனக்கு அனுப்பவேண்டும்
உலகில் உள்ள காதல் வார்த்தைகள் போதாது
புதியதாய் வேண்டும் இன்னும் பல ..வா வந்து விடு

தினம் தினம் பேசினாலும் நினைவுகள்
நீ இருப்பதை உணர்த்தினாலும் உன்முகம்
நித்தமும் பார்த்து பார்த்து பூரிக்க
பேராசை எனக்கு ..வா வந்து விடு

தட கள ஓட்டத்தில் தடைகள்
ஒவ்வொன்றாய் தாண்டி நீயும் நானும்

ஓடி கொண்டிருந்தாலும் தூரத்திலே நீயும்
தொலைத்த இதயத்துடன் நானும் .. வா வந்து விடு

நான் இப்போது பேராசைக் காரன்..
உலகம் குறுகி நீ தொட்டு விடும்
தூரத்தில் எனக்கு வேண்டும் என்ன
தவம் செய்ய வேடும் ..வா வந்து விடு

வா வந்து விடு ..என்ற வார்த்தைதனை
எத்தனை முறை நான் உச்சரிக்க வேண்டும்
உன் காதுகளில் அவை நுழைந்து உன்னை
முழு உருவாய் இங்கு கொணர ..சொல்லடி கிளியே !

கருத்துகள் இல்லை: