உயிரோடு கலந்த உணர்வுகளே
உணர்வுகள் உறைந்த எண்ணங்களே
எண்ணங்களில் நிறைந்த உன்னதமே
உன்னதமான ஒளிப் பூவே
பூவினும் மெல்லிய பெண்ணே
பெண்ணுக்கு அணிகலன் நீயே
நீயின்றி நானும் நானா ?
நானின்றி நீயும் நீயா ?
முடிவின் தொடக்கம் அந்தாதி என்பர்
முடிவே இல்லாத காவியம் வேண்டினேன்
முதல் முறை பார்த்த போது உன்னை
முகிழ்த்த மலராய் நீ தோன்றினாய்
பெண்மையின் மேன்மையை கண்டேன் உன்னில்
தந்தையின் பாதிப்பு உன்னிடம் அதனால்
பசுந்தமிழ் பாடல்கள் பிடித்தது
தெரிந்துருக்க வில்லை காதலி நீதான் என்று அன்று ..
கண்ணே கவிதைகள் எல்லாம் பொய்மை கலந்தது என்றாய்
உண்மையே உருவாய் உன்னை நான் காண்கிறேன்
உயிரே உருவாய் நீ உள்ள போது
உரைப்பேனா பொய்யை நான் உன் முன்னே
உணர்வும் உயிரும் நீயே வாழ்வும் நீயே
சுவர் வேண்டும் சித்திரம் எழுத – அதனால்
உணவுண்டு வாழ்வோம் உடல் காக்க
எனது உடல் உன்னிடத்திலும் உனது உடல் என்னிடத்திலும்
அதனால் ஊண் மறவோம் உறக்கம் மறவோம் உயிர் பாதுகாப்போம் கண்ணே ..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக