திங்கள், 30 ஜூலை, 2007

கவிதையே நீ

நினைத்த போது நேரில் வருகின்ற வரம் வேண்டும்
நீ என்னிடத்திலும் நான் உன்னிடத்திலும்
நட்சத்திரங்களே பூக்களாய் நிலவே விடிவிளக்காய் வேண்டும்
நானும் நீயும் இரவுப்போதை பேசியே தீர்க்க

மனதிலே நீ நினைத்தால் என் எண்ணங்களில் தோன்றவேண்டும்
நான் உனக்கு பதிலை அப்போதே அனுப்பலாமே அதனால்
உனக்கு காய்ச்சலேன்றால் என் உடல் கொதிக்க வேண்டும்
அந்த நோய் போக்க மருந்தை உனக்காக நான் (உட் )கொள்வேன்

உன் விரல்கள் எல்லாம் எனது விரல்களாய் மாற வேண்டும்
உன் நெற்றி குங்குமத்தை அப்போது தானே நான் வைக்க முடியும்
உனது பார்வை எல்லாம் எனது பார்வையாக வேண்டும்
உனது விழிகளில் உலகை நான் காண நினைப்பதால்

நீ பாடும் பாடல்களின் வார்த்தைகள் நானாக வேண்டும்
அப்போது தானே உனது உணர்விலே நான் கலந்திருப்பேன்
உனது சிரிப்பிலே எழுகின்ற நாதம் நானாக வேண்டும்
அதனால் தோன்றும் கலகல வென்ற அலை சிரிப்பு உன்னிடம்

நெஞ்சிலே உன் பெயர் எழுதி முத்துக்கள் தூவி
வைரமும் முத்தும் மற்றும் உயர்கற்கள் யாவும் பதித்து
உன் கூந்தலின் முடிதனில் சிலவற்றை எடுத்து மாலையாக்கி
உன் சங்கு கழுத்தினில் சூடுவேன் காதலியே ..காத்திரு

கருத்துகள் இல்லை: