திங்கள், 30 ஜூலை, 2007

கருவுற்ற காதல்

தேடிய நாட்கள் பல தேடுதல் தொடர்ந்தது
மனதிலே ஓடும் எண்ணங்கள் யாரே அறிவர்
சொல்லவொண்ணா துயர் என்றாலும் சொல்லுதல் ஆமோ
அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததால்
காலம முடியும் வரை என் காலம் முடியும் வரை
காப்பேன் என்றல்லவா சொல்ல வைத்தார்

அன்பு கொடியது அதனினும் கொடியது
அரவணைக்கும் காதல் என்பேன் பெண்ணே
விலை கொடுத்து வாங்க முடியும் என்றால்
அள்ளி கொடுத்தே அடுக்கடுக்காய் வாங்கி வைத்திடலாம்
அந்தோ ! வைரத்தை விடவும் அரிதான பொருளாயிற்று
அங்கே இங்கே எங்கெங்கும் தேடினேன் கிடைக்கவில்லை

உனக்குள்ளே ஊறிய ஊற்று எனக்கிங்கே புரிந்திருக்கவில்லை
உள்ளத்திலே நீதான் எப்படி வளர்த்திருந்தாய்
வெறும் நட்பாய் நான் நினைத்த நாட்களெல்லாம்
மெது மெதுவாய் உன்மனதில் உருவாகிய
காதல் என்று பிறகுதானே புரிய வந்தது
எத்தனை காலம்தான் ஏமாற்றிவிட்டாய் நீ

தேவதையாய் உணர்ந்தபோதும் அறிந்திருக்கவில்லை நான்
அரும்பும் காதல் மொட்டே அது என்று ..
நீருற்றி நீ வளர்த்த கதை நெடுநாட்கள்
மறைத்திருந்தாய் என்னிடம் நிறைமாத கர்ப்பிணியாய்
காதல் என்முன்னே வந்த போதே அறிந்தேன்
கரு தோன்றி காலம் பல ஆனதென்று

காதலை நீ பிரசவித்த போது
தந்தை நானென்று புளகாங்கிதம் அடைந்தேன்
கள்ளி நீ கனவிலே மட்டுமே
உருவாக்கிய குழந்தையை இத்தனை நாளாய்
மறைத்திருக்க எப்படி மனம் வந்தது
இப்போதாவது சொன்னாயே நன்றி உனக்கு !

2 கருத்துகள்:

siranjeevi சொன்னது…

very nice lines keep load more in your blog . ALL THE BEST

Vijayan சொன்னது…

Nandri Siranjeevi ennudaiya varigalai padithathu mattumalla paratiyatharkum